41 வயதில் காதல் காட்சியா? கிண்டல் செய்யாதீர்கள் : அஜீத் மனம் திறந்த பேட்டி!

Friday, April, 27, 2012
41 வயதில் காதல் காட்சிகளில் நடிப்பதா? கிண்டல் செய்யாதீர்கள் என்று கூறினார் அஜீத்.நடிகர் அஜீத் அளித்த பேட்டியில் கூறியதாவது:பில்லா 2 பற்றி கேட்கிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அதுபற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. படம் பார்ப்பவர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். இதில், ‘டூப் போடாமல் சண்டை போட்ட அனுபவம் எப்படி? என்கிறார்கள். தொழில் ரீதியான நடிகர் என்ற முறையில் எனது வேலையை செய்தேன். இக்காட்சிகளின் போது எனது பாதுகாப்புக்காக பட யூனிட் அதிக கவனம் எடுத்துக் கொண்டது. குறிப்பாக ஜெர்மனியை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டீபன் ரிச்டாருக்கு எனது நன்றி. நம் நாட்டின் எல்லையில் எல்லா துன்பங்களையும் தாங்கி கொண்டு நமது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி நிற்கும் ராணுவத்தினர்தான் நிஜமான ஹீரோக்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் எந்த சாதனையும் செய்து விடவில்லை.

எனது படங்களை தேர்வு செய்யும் போது தயாரிப்பாளர், இயக்குனர், எனக்கும் இடையே உள்ள புரிதல் மிக முக்கியம். 5 நிமிடங்கள் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் 50 நாட்கள் ஒன்றாக வேலை பார்க்க முடியாது. ஒரு ஸ்கிரிப்டை தேர்வு செய்வது கடினம். ஏனென்றால் சிறப்பாக கதை சொல்கிறவர் சில சமயம் சிறந்த இயக்குனராக இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனக்கு 41 வயது ஆகிவிட்டது. இனிமேல் காதல் காட்சிகளில் ரொமான்ஸ் செய்து கொண்டு நடிக்க முடியாது. அது கிண்டலுக்கு இடம் கொடுத்து விடும். என் மனைவி ஷாலினி உறுதியான மனம் படைத்தவர். எப்போதாவது சில சமயம் சினிமா பற்றி பேசிக் கொள்வோம். மற்ற தம்பதிகள் எந்த சவாலை எல்லாம் எதிர்கொள்வார்களோ அதை நாங்களும் எதிர்கொண்டோம். இவ்வாறு அஜீத் கூறினார்.

Comments