மீண்டும் 3 ஹீரோயின் கதையை இயக்கும் டைரக்டர்!!!

Monday, April, 30, 2012
ஜோதிகா, ரம்பா, லைலா 3 ஹீரோயின்கள் நடித்த ‘த்ரீ ரோசஸ்' பட இயக்குனர் பரமேஸ்வர் அடுத்து ‘உயிரெழுத்து' படத்தை இயக்குகிறார். இதுவும் 3 ஹீரோயின்கள் கதை. இது பற்றி பரமேஸ்வர் கூறியதாவது: மூன்று பெண்கள் தங்கி இருக்கும் ஒரு வீட்டில் நுழையும் நான்கு தீவிரவாதிகள் அவர்களை மிரட்டி அங்கேயே தங்குகின்றனர். அங்கிருந்தபடி நகரம் முழுவதும் வெடிகுண்டு வைத்து தகர்க்க முயல்கின்றனர். இதில் ஒரு பெண் அவர்களுக்கு துணைபோகிறார். இறுதியில் தீவிரவாதிகள் திட்டம் எப்படி முறியடிக்கப்படுகிறது என்பது கதை.

ஏற்கனவே இயக்கிய ‘த்ரீ ரோசஸ்' கதையில் 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதிலும் வர்ஷா, பிராச்சி, சூரியகிரண் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தீவிரவாதிகள் திட்டத்தை ஹீரோக்கள்தான் முறியடிப்பார்கள் என்ற சினிமா பார்முலாவை மாற்றி ஹீரோயின்கள் சாதிப்பதுபோல் இக்கதை அமைந்துள்ளது. விஜய் வில்சன் ஒளிப்பதிவு. பவன் இசை. சயத், மணி தயாரிப்பு.

Comments