3 சினிமா படத்தில் வரும் கொல வெறிடி பாடலுக்கு மலேசிய பிரதமரும் ரசிகர்!!!

Saturday, April, 28, 2012
கோலாலம்பூர்::நடிகர் தனுஷ் நடித்த 3 சினிமாவில் வரும் கொல வெறிடி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இங்கு வசிக்கும் தமிழர்களை சந்தித்து பேசுகையில், தனுஷ் நடித்த படத்தில் வரும் கொல வெறிடி பாடல் எனக்கும் பிடிக்கும். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த பாடலை ரசித்து கேட்டார் என்று கேள்விப்பட்டேன் என்றார்.மேலும், ரேடியோவில் வரும் கலக்கல் காலா நிகழ்ச்சியில் நஜிப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கொள்ளுங்கள். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளோம். தமிழர்கள் உள்பட சிறுபான்மையினத்தவருக்கு அரசு நிறைய திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. தமிழ் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது.

இந்திய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. மலேசியர்களை போலவே மற்ற இனத்தவர்களும் இங்கு முன்னேற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது தமிழ் நேயர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த சில தமிழ் சொற்களை சொல்கிறேன் என்று கூறி, அச்சமில்லை, நம்பிக்கை, ஒரே மலேசியா போன்ற சொற்களை கூறினார்.

Comments