‘சிங்கம்-2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்: சொந்த ஊரில் டைரக்டர் ஹரி பேட்டி!!!

Saturday, April, 28, 2012
நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும் இணைந்து பணிபுரிந்த படங்கள் ஆறு, வேல், சிங்கம். இந்த மூன்று படங்களும் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும் மீண்டும் இணைகிறார்கள். அந்தபடம் ஏற்கனவே வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக சிங்கம்-2 என்ற பெயரில் உருவாகிறது.

தற்போது டைரக்டர் ஹரி, தனது குலதெய்வம் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் தன்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளைக்கு வந்துள்ளார்.

சிங்கம்-2 படம் குறித்து டைரக்டர் ஹரி கூறியதாவது:-

எனது சொந்த ஊரான சக்கனாவிளையில் எங்களின் குலதெய்வம் கோவிலான நாராயணசுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா தற்போது நடந்துவருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன்.

சிங்கம்-2 தூத்துக்குடி சம்பந்தப்பட்ட கதையாகும். இந்த படத்தின் கதை தென்னிந்தியாவில் தொடங்கி தென்ஆப்ரிக்காவில் முடிகிறது. சிங்கம்-2 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தூத்துக்குடியில் தொடங்குகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடி மாவட்டத் திலேயே படமாக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

இதில் நடிகர்கள் சூர்யா, விவேக், சந்தானம், நடிகைகள் அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். சிங்கம்-2 படத்தின் உச்சகட்ட காட்சிகள் தென் ஆப்ரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு டைரக்டர் ஹரி கூறினார்.

Comments