பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானிடம் நியூயார்க் விமான நிலையத்தில் 2 மணிநேர விசாரணை!!!

Friday, April, 13, 2012
நியூயார்க்::பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானிடம் நியூயார்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க குடியேற்ற துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளின் இந்த அதிகாரத்தோரணையை தான் அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் பார்க்க முடிகிறது என்றார்.

நியூயார்க் யாலே பல்கலை.,யில் முகேஷ் அம்பானியின் மகள் படித்து வருகிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஷாரூக்கான் , மற்றும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சென்றனர். நியூயார்க் சென்ற விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் வழக்கமான பல்கட்ட சோதனைகள் நடக்கும். இந்த சோதனையில் , ஷாரூக்கான் என்ற பெயரை கேட்டதும், கூடுதல் விசாரணைக்குப்படுத்த முன் வந்தனர். ஷாரூக்கானை விமான நிலையத்திலலேயே நிறுத்தி வைத்தனர். குடியேற்றதுறை , பாதுகாப்பு மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பலகட்டமாக துருவி. துருவி கேள்வி எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை ஓடியது. நிகழ்ச்சிக்கு வராத ஷாரூக்கான் நிலை குறித்து யாலே பல்கலை., நிர்வாகிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்ட போது இவ்வாறு விசாரணை நடப்பது தெரியவந்தது.

ஷாரூக்கானிடம் இது போன்று அமெரிக்காவில் விசாரணை நடத்தப்படுவது 3 வது முறை. கடந்த சில மாதங்களுக்கு அமெரிக்கா சென்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டார். இது பார்லி.,யில் நமது எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments