ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!!!

Thursday, March 22, 2012
ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.

வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.

காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.

Comments