சொந்தப்படத்துக்கு ஓகே சொன்ன ஷங்கர்!!!

Wednesday, March 28, 2012
பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கூட பரவாயில்லை. 'குண்டு' விழுந்தால் என்னாவது? அப்படி ஒரு அதிர்ச்சியான குண்டடிக்கு ஆளாகி தனது அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்தான் பிரபல இயக்குநர் ஷங்கர். 'வெயில்', 'ஈரம்' தவிர இவர் தயாரித்த மற்ற படங்கள் எல்லாமே ஷங்கரின் உள் பாக்கெட்டையும் சேர்த்து காலி பண்ணியது. அதிலும் பிரபல இயக்குநர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் பெருத்த பிரச்சினையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த கரகரக் குரல்காரர் ஒரு கோடி சம்பளம் கேட்க, நயன்தாராவை டூ பீஸ்ல நடிக்க வச்சாலே இவ்வளவு கேட்க மாட்டாரே என்று குழம்பிப் போனார் ஷங்கர். இருந்தாலும் கேட்பவர் இமயமாச்சே... கொடுக்காமலிருந்தால் குரு துரோகத்திற்கு ஒப்பாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் அழுது வைத்தார். படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது. அதன்பின் எந்த இயக்குநராவது சொந்தப்படம் எடுக்கிறார் என்று குருவியார் பதில்களில் படிக்க நேர்ந்தால் கூட கண்ணை மூடி 'கடவுளே... அவரை காப்பாற்றுமப்பா காப்பாற்றும்' என்று பலம் கொண்ட மட்டும் ஜெபிக்கிற அளவுக்கு நிலைகுலைந்து போவார். இரும்புக்கோட்டையின் கதவை எறும்புகள் தட்டிய மாதிரி அதன்பின் ஷங்கரை தட்டி தட்டி ஓய்ந்து போன புது இயக்குநர்கள் பலர், அந்த தெரு வழியே கூட இப்போது நடப்பதில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு புது இயக்குநர் ஷங்கரிடம் கதை சொல்லி, அவரது பிடிவாதத்தின் மீது கோடாலியை போட்டிருக்கிறார். 'இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும்' என்று அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நல்ல செய்தியை அறிவிக்க இன்னும் நாலைந்து மாதங்களாவது ஆகும் போல தெரிகிறது. சுருட்டி வச்ச திரைய தூசி தட்டுங்க....

Comments