தொடரும் அமலா பாலின் ஆட்டம்!!!

Friday, March 23, 2012
ந‌ரிக்கு நாட்டாமை கிடைத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும். அப்படிதான் இருக்கிறது அமலா பாலின் அலட்டல். கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரை மலையாள சினிமா துணை நடிகை அளவுக்கே ம‌ரியாதை செய்தது. அறிமுகமான நீலத்தாமராவில் மிக்சிறிய வேடம். தமிழில் வீரசேகரன், சிந்துசமவெளி என ஓடாத இரு படங்கள்.

FILEஅமலா பாலின் ஜாதகத்தை திருத்திய எழுதியது மைனா. அதன் பிறகு விக்ரம் இவரது திறமைக்கு மீறிய வாய்ப்பை அளித்து அமலா பாலின் அகந்தையை ஊட்டி வளர்த்தார். அதன் பிறகு இவர் காட்டியதெல்லாம் இங்கிலாந்து இளவரசி செய்யத் தயங்கும் கூத்துகள். இரண்டு சேனல்களுக்கு மட்டுமே பேட்டி தருவேன், படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று இவர் காட்டும் அலட்டல் அகந்தையின் உச்சம். தெலுங்கில் படங்கள் வர ஆரம்பித்ததால் ஒப்புக் கொண்ட தமிழ்ப் படங்களை உதற ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக ஜெயம் ரவி நடிக்கும் படம்.

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட அமலா பால் தற்போது கால்ஷீட் பிரச்சனை முடியாது என்று கை வி‌ரித்திருக்கிறார். விஜய், அ‌‌ஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே அமலா பால் இனி நடிப்பார், அதனால்தான் இந்த முடிவு என அவ‌ரின் அல்லக்கைகள் அடித்துவிடுகிறார்கள்.

Comments