15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைட்டானிக்! இம்முறை 3-டியில்!!!!!

Saturday, March 24, 2012
உலகெங்கும் வசூலை வாரிக்குவித்த டைட்டானிக் படம், 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது, 3டி தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சரித்தர சாதனை படைத்த படம் டைட்டானிக்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையையும் சேர்த்து டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100-ம் ஆண்டு நினைவு தினம். இந்த சோகத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றித் தந்து இருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் டைட்டானிக் 3டி வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீசாக இருக்கிறது.

Comments