தமன்னாவை பற்றி புரளி கிளப்புவதா? தந்தை கோபம்!!!

Friday, March 2, 2012
தமிழில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. இந்நிலையில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் கால்ஷீட் குழப்பம் காரணமாக அப்படத்திலிருந்து தமன்னா விலகிவிட்டார். அவருக்கு பதிலாக கன்னட நடிகை அக்ஷரா நடிக்கிறார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியானது.
இதற்கு தமன்னாவின் தந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தமன்னா பற்றி சமீபகாலமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுவது தவறு. அந்தப்படத்தில் நடிப்பது உறுதி. ஆனால் மற்ற படங்களில் நடிப்பதால் கால்ஷீட் தருவதில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தி படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது’ என்றார்.

Comments