அப்பா கமல் நாத்திகம்... மகள் ஸ்ருதி ஏழுமலையானிடம் வேண்டுதல்!!!

Friday, March 2, 2012
நடிகர் கமல்ஹாஸனின் நாத்திகவாதம் ஊரறிந்தது. தான் நாத்திகம் என்பதற்காக அவர் மற்றவர் நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை.

அதற்கு அவர் குடும்பத்திலிருந்தே ஒரு உதாரணம். கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாஸன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று நெய்வேத்தியம் செய்து வழிபட்டார்.

கோவிலுக்குள் ஸ்ருதியைக் கண்டதும் ரசிகர்கள் அவரை நெருங்க முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

வழிபாடு முடிந்து வெளியில் வந்தபோது, கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி ரசிகர்களுக்குக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து காளகஸ்தி கோவிலுக்குப் புறப்பட்டு சென்றார்.

Comments