கார்த்தி படத்திலிருந்து விலகிய லட்சுமிராய், தற்போது ஜீவா நடிக்கும் படத்தில் இருந்தும் விலகியுள்ளார்!!!

Sunday, March 11, 2012
கார்த்தி படத்திலிருந்து விலகிய லட்சுமிராய், தற்போது ஜீவா நடிக்கும் படத்தில் இருந்தும் விலகியுள்ளார். ‘தாம் தூம்Õ, ‘காஞ்சனாÕ, ‘மங்காத்தாÕ படங்களில் நடித்திருக்கும் லட்சுமி ராய் அடுத்து கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஏற்கவில்லை. தனது கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார். அடுத்து அஹமத் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் Ôஎன்றென்றும் புன்னகைÕ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க மறுத்திருக்கிறார். தமிழை பொறுத்தவரை புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாத லட்சுமிராய் தெலுங்கு, மலையாளம். கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக ஏற்கனவே லட்சுமிராய் கூறி வந்தார். தற்போது அனுஷ்க் பட் இயக்கும் புதிய இந்தி படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இதில் சச்சின் ஜோஷி, மல்லிகா ஷெராவத் ஆகியோரும் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் அனுஷ்க் கூறும்போது,‘லட்சுமி ராய் என்னுடைய படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறேன். படத்தின் கதையை கூறியபோது ஆர்வமாக கேட்டார். பிறமொழியில் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் தனது கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தருவதாக கூறினார். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளதுÕ என்றார். இந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதால்தான் தமிழ் படங்களை லட்சுமிராய் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி லட்சுமிராயிடம் கேட்டபோது, Ôநோ கமென்ட்ஸ்Õ என்று மட்டும் பதில் வந்தது. அதே நேரம் Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். Ôஎன்றென்றும் புன்னகைÕ படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அதனால் அப்படங்களில் அவர்களுக்கே முக்கியத்துவம் இருக்கும் என்பதால் லட்சுமிராய் விலகிவிட¢டதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

Comments