மலையாள தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார்: வழக்கு தொடரவும் முடிவு!!!

Sunday, March 04, 2012
நடிகை ஸ்ரேயா மலையாள பட அதிபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா நடித்து அண்மையில் வெளிவந்த மலையாள படம் போக்கிரி ராஜா. அதில் மம்மூட்டி, பிருத்விராஜ், ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தம்பியான மம்முட்டி, பிரித்விராஜில் ஸ்ரேயா தம்பியைக் காதலிக்கிறார். தனது தம்பியின் காதலை சேர்த்து வைக்க அண்ணன் போராடுவது தான் கதை.

இந்த படத்தை தாமஸ் ஆண்டனி என்பவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் தாமஸ் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து ஸ்ரேயா கூறியதாவது,

போக்கிரி ராஜா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதை வேறு மொழிகளிலும் டப் செய்து வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்து தான் நடிக்க ஓகே சொன்னேன். அதற்கான ஒப்பந்தத்தில் நானும், தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டுள்ளோம். இந்நிலையில் ஒப்பந்தத்தை தாமஸ் மீறிவிட்டார். அதனால் அவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

போக்கிரி ராஜா படத்தை தமிழ் உள்பட வேறு எந்த மொழியிலும் டப் செய்து வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்திருக்கிறேன் என்றார்.

Comments