வில்லனாக மாறிய சூர்யா?!!!

Tuesday, March 27, 2012
தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கான தமிழ் மசாலா சினிமா ஃபார்முலாவில் குறைந்தது அரைடஜன் வில்லன்களை வைத்து கதை பின்னுவதை வழக்கமாக்கி விட்டார்கள். 'கோச்சடையான்' 3டி அனிமேஷன் படமும் இதற்கு விதிவிலக்கு கிடையாதாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு மொத்தம் ஆறு வில்லன்கள். அதேபோல விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி'யில் பிரதான வில்லனை அடையும் முன்பு, மூன்று கொடூரமான தாதா வில்லன்களை, மிக புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி போட்டு தள்ளும் விஜய் இறுதியில் போட்டுத்தள்ளும் வில்லனை சோட்டா சகில் போல சித்தரித்திருக்கிறாராம் ஏ.ஆர் முருகதாஸ். இது ஒருபுறம் இருக்க தற்போது கோடம்பாக்கத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் 'மாற்றான்' படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்று மறுத்திருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், அந்தப் படத்தில் சூர்யாவும் ஒரு வில்லன் என்பதை மட்டும் மறைத்து விட்டார் என்கிறார்கள் சூர்யா வட்டாரத்தில்! மாற்றானில் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய மூன்றுபேர் வில்லனாக நடிக்கிறார்கள். ஒருவர் 'நடுநிசிநாய்கள்' படத்தில் அறிமுகமான வீரா, மற்றொருவர் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' மிலிந் சோமன், முன்றாமவர் 'காக்க காக்க' டேனியல் பாலாஜி! இவர்களோடு நான்காவதாக சூர்யாவும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். அதாவது திரைக்கதையின்படி இந்தப் படத்தில் சூர்யா ஏற்றிருப்பது வில்லன் கதாபாத்திரம்தானாம்! மங்காத்தா ட்ரெண்ட் செட்டா...?

Comments