கோச்சடையான்: லண்டன் ஸ்டுடியோவில் ரஜினி - சரத் - ஆதி!!!

Monday, March 26, 2012
கோச்சடையான் - தி லெஜன்ட் வரலாற்றுப் பட ஷூட்டிங் லண்டனில் தொடங்கியது.

இந்தப் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்றார். அவருடன் நடிகர்கள் சரத்குமார், ஆதி உள்ளிட்டோம் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ரஜினி - தீபிகா காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஸ்டுடியோவில்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்படுகின்றன.

சில தினங்களுக்கு முன் ரஜினி, சௌந்தர்யா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் லண்டன் சென்று சேர்ந்தனர். சமீபத்தில் சரத்குமார், அவர் மனைவி ராதிகா மற்றும் மகன் ராகுலுடன் லண்டனுக்குப் போய் ரஜினியுடன் சேர்ந்து கொண்டார்.

அடுத்து நடிகர் ஆதியும் லண்டன் போயுள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்..

இரு தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கோச்சடையான் படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவுக்கு வந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். லண்டனில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் அரங்குகள் அமைத்து இரண்டாம் கட்ட சூட்டிங் நடைபெற உள்ளது.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று ரஜினி ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந்த படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது

ரஜினி, சரத், ஆதி தொடர்பான காட்சிகள் படமாகின்றன. இந்தப் படப்பிடிப்பின்போது, ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சரத்குமாரும் ராதிகாவும்.

இதுகுறித்து ராதிகா கூறுகையில், "கோச்சடையான் படப்பிடிப்பு இடைவெளையில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தது இனிய அனுபவம். அப்போது நாங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். கேரவன் இல்லாமல், வெட்ட வெளியில் சாப்பிட்டுவிட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த பழைய நினைவுகளை ரஜினி சார் சொல்லி மகிழ்ந்தார். அன்றைக்கு நடிகர்களுக்குள் அத்தனை அழகான, எளிய உறவு இருந்தது," என்றார்.

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு ல்ணடனில் உள்ள பைன்பட் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடக்கிறது. வசன காட்சிகள் இங்கு படமாகி வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு இந்த ஸ்டூடியோவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இதே ஸ்டூடியோவில்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் படப்பிடிப்பு நடந்தள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Comments