சிம்பு படத்திற்கு நோ சொன்ன நயன்தாரா...?!!!

Friday, March,30, 2012
இயக்குனர், நடிகர், பாடகர் என பலமுகம் கொண்ட சிம்பு, தற்போது “வேட்டை மன்னன்” படத்தில் நடித்து வருகிறார். இதில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இந்த மூன்று கதாநாயகிகளின் நடிப்பில், ஒரு கதாநாயகியின் நடிப்பு திருப்தி இல்லாமல் இருந்ததாம். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நயன்தாராவிடம் போய் கால்ஷீட் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நயன்தாராவோ என்னிடம் தற்போதைக்கு கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார்.

நயன்தாரா சினிமாவில் ரீ எண்ட்ரி ஆன பிறகு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தற்போது அஜித்துடன் ஒரு படமும், தெலுங்கில் ராணாவுடன் ஒரு படமும், இன்னும் சில படங்களும் ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் தான், இப்படத்திலும் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனாதாம்.

Comments