ஆந்திர அரசு சார்பில் சரோஜாதேவி, ஜெயசுதா, ஜெனிலியாவுக்கு விருது!!!

Saturday, March 24, 2012
ஆந்திர அரசு சார்பில் திரையுலகினருக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு இணையானவை. 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.

விழாவில் ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி பங்கேற்று அரசு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ''அரசியலும் சினிமாவும் ஒன்றுதான். அரசியலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. அதுபோல் சினிமாவிலும் எந்த படம் ஜெயிக்கும் என்பது தெரியாது'' என்றார்.

பழைய நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ஆர். தேசிய விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசும்போது, ''என்.டி.ஆருடன் இணைந்து படங்களில் நடித்துள்ளேன். அவர் பெயரால் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

பழைய நடிகை சாரதாவுக்கும் என்.டி.ஆர். விருது வழங்கப்பட்டது. நடிகைகள் ஜெயசுதா, நித்யாமேனன், ஜெனிலியா, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நந்தி விருதுகள் பெற்றனர்.

Comments