கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில், கார்த்தி நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார்!!!

Wednesday,March,21,2012
கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று கோடம்பாக்கத்து ஹீரோக்கள் பலரும் ஏங்கியிருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி கௌதம் மேனன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார்.

கார்த்தியின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று அவரை சந்தித்துக் கேட்டால், "எந்த கதையாக இருந்தாலும் அது எனக்கு பொருந்துமா என்றுதான் முதலில் நான் பார்ப்பேன். கௌதம் மேனன் கதையில் மிகவும் மென்மையான இளைஞனுக்கும், இளைஞிக்கும் இடையே ஏற்படும் அழகான ரொமான்டிக் காதல் தான் கரு. அந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக பொருந்தமாட்டேன் என்று எனக்கு தோன்றியது. அதனால்தான் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்" என்கிறார் நம்ம சிறுத்தை.

தற்போது கார்த்தி சகுனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்க கையெழுத்திட உள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் என்றாலே, ரொமான்டிக்-காமெடி என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது என்கிறார் கார்த்தி.

Comments