தேசிய விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் கிரீஷ் குல்கர்னி, சிறந்த நடிகை வித்யா பாலன்!!!

Wednesday,March,07,2012
டெல்லி::59 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தியோல் மராத்தி படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகவும், தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாகை சூட வாவுக்கு விருது

சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது வாகை சூடவா தமிழ்ப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

அழகர்சாமியின்குதிரை படம் சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்வாகியுள்ளது. இதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

ஷாரூக்கானின் சயின்ஸ் பிக்ஷன் படமான ரா ஒன்னுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த படத்துக்கான விருது ஓனிர் இயக்கிய 'ஐ யாம்' (I Am) இந்திப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

மேலும் விவரங்கள் தொடரும்...

Comments