மாமியாருக்காக ஐநா பயணத்தை ரத்து செய்தார் குஷ்பு!!!

Monday, March 12, 2012
மாமியாருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணைமாக தனது ஐ.நா பயணத்தை நடிகை குஷ்பு ரத்து செய்துள்ளார்.

நைரோபியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்ற நடிகை குஷ்புவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றவிருந்தார்.

தற்போது தனது மாமியாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐ.நா பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டுக்காகவே சங்கரன்கோயில் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து சென்னை திரும்பினார் குஷ்பு.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.நா. மாநாட்டுக்கு செல்ல முடியவில்லை. எனது மாமியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வருகிற 15-ந் தேதி வாக்கில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆஞ்சியோகிராம் நடந்துள்ளது. எனக்கு குடும்ப பொறுப்புகள்தான் முதலில். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

மாமியார் உடல் நலக்குறைவாக இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.நா. சபை மாநாட்டுக்கு செல்வது என்பது இயலாத காரியம். மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலை குறித்து ஏற்கனவே ஐ.நா. சபைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.

ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க எதிர்காலத்தில் வாய்ப்பு கிட்டலாம். ஆனால் மாமியாருக்கு உதவியாக அவர் பக்கத்தில் இருப்பதுதான் இப்போது எனக்கு முக்கியம்’’ என்று கூறியுள்ளார்.

Comments