சேரனின் முயற்சியால் 'காயம்' ஆன 'வெங்காயம்!!!

Tuesday, March 13, 2012
கடந்த 2011ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகமே தூக்கி வைத்து கொண்டாடிய படங்களில் முக்கியமான ஒரு படம் 'வெங்காயம்'. திரையுலகத்தினர் இப்படத்தைப் பார்த்து கொண்டாடினார்களே தவிர, ரசிகர்கள் அல்ல. அதற்கு காரணம், விளம்பர உலமான இன்றைய காலகட்டத்தில் பெரிய படங்களின் பட்ஜெட் மற்றும் நட்சத்திர பலத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனதால்தான் வெங்காயம் என்ற ஒரு படம் வெளிவந்ததா? என்று ரசிகர்கள் கேட்கும் நிலை இப்படத்திற்கு ஏற்பட்டது.

இருப்பினும் திரையுலகத்தினர் முயற்சியில், அதிலும் இயக்குநர் சேரனின் முயற்சியால் இப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமார் என்ற இளைஞர் இயக்கி தயாரித்த இப்படத்தை இம்முறை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சேரன் தனது சொந்த பேனரில் 'காயம்' என்ற தலைப்பில் இப்படத்தை மீண்டும் வெளியிடுகிறார்.

இதுவரை கேமரா முன் நிற்காத சாதரண மக்களை நடிகராக்கி, எதார்த்தத்தையும் உண்மையையும் தைரியமாக சொல்லிய இப்படம் வரும் மார்ச் 23ஆம் தேதி வெளியாகிறது.

Comments