ஐஸ்வர்யா விரும்பினால் நடிக்கலாம் - அபிஷேக் பச்சன்!!!

Tuesday, March 13, 2012
குழந்தை குடும்பம் என புதிய உலகில் இருக்கும் தன் மனைவி ஐஸ்வர்யா ராய் விருப்பப்பட்டால் மீண்டும் நடிக்கலாம் என்று அபிஷேக் பச்சன் கூறினார்.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக நடித்த படம் குஜாரிஸ். நடிக்க ஒப்புக் கொண்டு, கர்ப்பம் காரணமாக பின் விலகிய படம் ஹீரோயின்.

ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த வருடம் நவம்பர் 16-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையுடன் விளையாடிக் கொண்டும், குழந்தைக்குத் தேவையானதை செய்து கொண்டும் முழு நேரமும் செலவிடுகிறார்.

ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பாரா என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது கணவர் அபிஷேக் பச்சன் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய் குழந்தையுடன் முழு நேரமும் செலவிடுகிறார். அவர் நடிப்பதா வேண்டாமா என்பது ஐஸ்வர்யாராய்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் எப்போது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது நடிக்கலாம். நிறைய பேர் இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்," என்றார்.

Comments