ரஜினி, அஜீத் மீது பொய்புகார் கொடுத்தவர் இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் - தாணு!!!

Friday, March 23, 2012
ரஜினி, கமல் போன்றவர்கள் மீது முன்பு பொய் புகார் கொடுத்தது போலவே, இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் ஜாகுவார் தங்கம் என தயாரிப்பாளர் சங்க நிர்வாகி கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு பரபரப்பு புகார் அளித்தார்.

அதில், ‘தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், துப்பாக்கியால்தான் பேசுவோம் என்று எச்சரித்ததாகவும்' குற்றம் சாட்டி, நடவடிக்கை கோரினார்.

இதுகுறித்து, தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "19-ம் தேதி ஆந்திரா கிளப்பில் நடந்த தயாரிப்பாளர் சங்க சிறப்பு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது வடிவேலு என்பவர் என்னை வழி மறித்தார். சட்டையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.

இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விளக் கம் அளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தேன்," என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறுகையில், "ஜாகுவார் தங்கம் எங்கள் மீது கொடுத்திருப்பது பொய்யான புகார். இவர் எங்கள் மீதுமட்டுமா இப்படி புகார் கொடுத்திருக்கிறார்... ஏற்கனவே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, தம்பி அஜித் போன்றவர்கள் மீதும் பொய்யான புகார் கொடுத்தவர். இது பொய்யான புகார்தான் என்பதற்கு டிவிடி ஆதாரம் ஒன்றையும் கொடுத்துள்ளோம். பெப்சி அமைப்பை சேர்ந்தவர்களே ஜாகுவார் தங்கம் மீது அதிருப்தியில்தான் இருக்காங்க," என்றார்.

Comments