இந்தி நடிகருடன் சேர்ந்து வாழ்கிறேனா? : எமி ஜாக்சன் பரபரப்பு பேட்டி!!!

Tuesday, March 13, 2012
இந்தி நடிகருடன் சேர்ந்து வாழ்வதாக கூறப்படுவது குறித்து எமி ஜாக்ஸன் பதில் அளித்தார். ‘மதராச பட்டினம்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். அடுத்து கவுதம் மேனன் இயக்கிய ‘ஏக் தீவானா தாÕ என்ற இந்தி படத்தில் நடித்தார். இதில் ஹீரோ, பிரதீக். இவர்கள் இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசு பரவியது. இதற்கு பதில் அளித்த எமி ஜாக்ஸன் கூறியதாவது: நடிகையாவேன் என்று கனவில்கூட நினைத்தது கிடையாது. இயக்குனர் விஜய், Ôமதராசபட்டினம்Õ படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தியில் கவுதம் மேனன் இயக்கிய Ôஏக் தீவானா தாÕ படத்தின் மூலம் அறிமுகமானேன். இதற்கு முன் நடித்த அனுபவம் கிடையாது. தமிழ் திரையுலகம்தான் நான் நடிப்பு பயின்ற முதல் இடம். இந்தியில் நடித்தபோது பிரதீக்குடன் காதல் மலர்ந்துவிட்டதாக கிசுகிசு வருகிறது. 2 வருடத்துக்கு முன் கவுதம் மேனன் வீட்டில்தான் பிரதீக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே இருவரும் மனம்விட்டு பேசினோம். பிடித்துவிட்டது. ஆனால் நாங்கள் காதலிக்கிறோம் என்பது உண்மை அல்ல. எனக்கு ஏற்றவரை காண்பதற்காக காத்திருக்கிறேன். பிரதீக்கை பொறுத்தவரை இந்தி படத் தில் எனது லவ்வராக நடித்தார். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்வதாக சொல்வதும் தவறு. இந்தி பட புரமோஷனுக்காக என் வீட்டுக்கு பிரதீக் மட்டுமல்ல பட குழுவே அடிக்கடி வந்திருக்கிறது. அடுத்து தெலுங்கு படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிக்கிறேன். இம்மாதம் ஷூட்டிங். விக்ரமுடன் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கிறேன்.

Comments