மணியை கோபத்துக்கு ஆளாக்கிய சமந்தா!!!

Tuesday, March 13, 2012
மீனவர்கள் பிரச்சினையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படம், 'கடல்'. இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கிவிட்டது. 'கடல்' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் சமந்தா வசனமே இல்லாத ஒரு காட்சிக்கு நடித்தாராம். அதுவும் அவர் 15 டேக் வாங்கித்தான் ஒழுங்காக நடித்திருக்கிறார். இதனை பார்த்த மணிரத்னம் கடுப்பாகிவிட்டாராம். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் படப்பிடிப்பின்போது இருந்த டெக்னீஷியன்கள் மேல் மணிரத்னம் எரிஞ்சி விழுந்தாராம். எங்கே நடிகையிடம் கோபத்தை காட்டினால் அவர் நடிக்க மாட்டாரோ என்று எண்ணிதான் மணிரத்னம் இவ்வாறு நடந்துகொண்டதாக பேசிக்கொள்கிறார்கள். சாரு, கதாநாயகியை தேடித் தேடி கண்டுபிடிச்ச இலட்சணம் இதானாக்கும். அழகா இருந்தா மட்டும் போதாதம்ணி.. சமத்தாவும் நடிக்க தெரியணும் ஆமா......

Comments