நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” - கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா!!!

Monday, March 26, 2012
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடி வெடுத்து இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதற்கு சுரேஷ்ரெய்னா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

அனுஷ்கா சர்மாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தி பற்றி சமீபத்தில் கேள்விப் பட்டேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அனுஷ்கா சர்மாவை லண்டனில் சந்தித்தேன். அங்கு கிரிக்கெட் போட்டியை காண அவர் வந்து இருந்தார். மற்றபடி அவருடன் எந்த தொடர்பும் இல்லை.

இந்த வதந்திகள் எங்கிருந்து கிளம்பின என்று தெரிய வில்லை. எனக்கு இன்னும் ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்களிலோ திருமணம் நடக்கும். ஆனால் உறுதியாக ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். அனுஷ்கா சர்மா போன்ற நடிகையை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

என்னுடையது நடுத்தர குடும்பம். என்னையும் எங்கள் குடும்பத்தையும் புரிந்து கொண்ட பெண்ணை மணப்பேன். எனது வருங்கால மனைவி புத்தி கூர்மை உள்ளவராகவும் எனக்கு நல்ல துணையாகவும் இருக்க வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் என்னுடன் இருந்து ஆதமார்த்தமாக அன்பு செலுத்துபவராகவும் விளங்க வேண்டும்.

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் துவக்க விழா நிகழ்ச்சிகளை காண ஆர்வமாக இருக்கிறேன். அவ்விழாவில் கரீனா கபூர், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்றோர் பங்கேற்க உள்ளனர். எனது பெற்றோருடன் அந்த விழாவில் பங்கேற்பேன்.

Comments