
நடிகைகள் சர்ச்சையில் சிக்குவது என்பது சித்தெறும்பு சர்க்கரையில் மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானது. ஒரே இனிப்பு மயம்தான்.
காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக அறிமுகமானவர் சரண்யா. ஓ.. அப்படியா என்று சொல்லக் கூடிய அளவில்தான் நேற்று வரை நிலைமை இருந்தது. இன்று.... தயாரிப்பாளர்கள் தேடி வந்து அட்வான்ஸ் தருகிறார்கள். எல்லாம் நிர்வாண போஸ் சர்ச்சையால் வந்த திடீர் வசந்தம்.
மழைக்காலம் படத்தில் சரண்யா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தார் என பரபரப்பாகப் பேசப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த சர்ச்சைக்குப் பின்னால் சரண்யா காட்டில் பரவலாக வாய்ப்பு மழை. முயல் என்ற புதிய படம் இந்த சர்ச்சைக்குப் பின்னால் கிடைத்திருக்கிறது. மேலும் சில படங்களில் நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம். பேராண்மை படத்தில் கிடைக்காத பாப்புலாரிட்டி மழைக்காலம் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது என பூரிக்கிறார்.
படம் வெளிவந்தால் மேலும் பல வாய்ப்புகள் சரண்யாவுக்கு கிடைக்கக்கூடும்.
Comments
Post a Comment