இந்தியில் உருவாகும் படத்தில் மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பிரியாமணி மறுப்பு!!!

Wednesday,March,21,2012
அபுசலீம் பற்றி இந்தியில் உருவாகும் படத்தில் மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பிரியாமணி மறுத்துள¢ளார். போஜ்புரி நடிகரான கமால் ஆர்.கான், தேஷ் துரோஹி என்ற படத்தை இந்தியில் இயக்கி ஹீரோவாக நடித்தார். இப்போது தேஷ் துரோஹி 2 என்ற படத்தை உருவாக்க உள்ளார். இது நிழல் உலக தாதாக்கள் பற்றிய கதை கொண்ட படமாம். அதனால் அபுசலீம் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு காட்சிகள் அமைக்க உள்ளார். இதில் அபுசலீமின் காதலியான நடிகை மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பலரை கேட்டார். சர்ச்சைக்குரிய வேடம் என்பதால் இந்தி நடிகைகள் மறுத்து வந்தனர். இந்நிலையில் Ôராவண்¢, Ôரக்த சரித்ரா ஆகிய இந்தி படங்களை பார்த்த கமால் கான், அதில் நடித்திருந்த பிரியாமணியை தேர்வு செய்ய முடிவு செய்தார். பிரியாமணியின் செல்போன் நம்பர் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவரது இமெயில் முகவரி கிடைத்து வ¤ட்டது. இதையடுத்து, எனது படத்தில் மோனிகா பேடி வேடத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். இது பற்றி விரிவாக பேச விரும்புகிறேன். உங்கள் மேனேஜர் செல்போன் நம்பர் கொடுங்கள் என கேட்டு கமால் கான் மெயில் அனுப்பினார். ஆனால் பல நாட்களாகியும் அவருக்கு பதிலே வரவில்லையாம். ஸ்பெயினில் ஷூட்டிங்கில் இருந்த பிரியாமணி சமீபத்தில்தான் நாடு திரும்பினார். இதற்கிடையே தனது மெசேஜுக்கு பிரியாமணி பதில் கூட அனுப்பவில்லை என டுவிட்டரில் கமால் கான் கவலை தெரிவித்திருந்தார்.
இது பற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, மெயிலில் தகவல் வந்தது பற்றி எனக்கு தெரியாது. அதை நான் பார்க¢கவும் இல்லை என்றார். மோனிகா பேடி வேடத்தில் நடிப்பீர்களா என கேட்டபோது, அந்த படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை என கூறினார்.

Comments