வெகு நாட்களுக்குப் பிறகு தற்போது சினிமாவில் முகம் காட்ட உள்ளார்-அரவிந்த் சாமி!!!

Friday, March 23, 2012
தளபதி, ரோஜா, மின்சாரக் கனவு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை குறிப்பாக பெண்களைக் கவர்ந்த நடிகர் அரவிந்த் சாமி சில காலத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி சொந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

வெகு நாட்களுக்குப் பிறகு தற்போது சினிமாவில் முகம் காட்ட உள்ளார் அரவிந்த் சாமி. இவர் மறு அறிமுகமாக உள்ள படம் கடல். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கார்த்தியின் மகன் கௌதம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பின்னணி இசை குறித்து ஏர்.ஆர். ரஹ்மானும், மணி ரத்னமும் திருச்செந்தூரில் (கடல் பகுதி) சந்தித்து பேசி 2 டிராக்குகளையும் ஓகே செய்துள்ளனர். இந்த இரண்டு பாடல்களில் ஒன்றிற்கு மதன் கார்கேவும், மற்றொன்றிற்கு வைரமுத்துவும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்யும் படமாக இது அமையும் என்று படத்தின் தலைப்பே கூறுகிறது.

Comments