கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு: நயன்!!!

Sunday, March 11, 2012
நடிகை நயன்தாராவுக்கு பிடித்த நிறம் கருப்பு. ஷூட்டிங் இல்லையென்றால் அம்மணி கருப்பு நிற உடைகளையே விரும்பி அணிகிறார்.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிறார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவுடனான திருமணம் நின்று அவரைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. இத்தனை நாட்களாக சினிமாவைவிட்டு விலகியிருந்த அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். அதனால் இனி நயன் படு பிஸி தான்.

அவருக்கு பிடித்த நிறம் கருப்பாம். படத்தில் அனைத்து காட்சிகளிலும் கருப்பு நிற உடைகளில் வரமுடியாதல்லவா அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு மிகவும் பிடித்த கருப்பு நிறத்தில் மட்டுமே உடையணிகிறார். இவ்வளவு ஏன் அவரது கார் கூட கருப்பு நிறம் தான். கருப்பு நிறம் மீது இவ்வளவு மோகம் ஏன் என்று கேட்டால், யார் கருப்பு நிறத்தில் உடையணிந்தாலும் அது அவர்களுக்கு அழகாக இருக்கும் என்கிறார்.

பில்லா படத்தில் கூட கருப்பு நிறத்தில் கவர்ச்சியாக உடையணிந்து கருப்பு நிற கூலிங் கிளாசில் அசத்தலாக வந்ததை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது தான்.

தற்போது நயனதாராவை பில்லா 2 படத்திலும் கெஸ்ட் ரோலிலாவது நடிக்க வைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

Comments