ஷூட்டிங்கில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றது ஏன்? சிம்பு பேட்டி!!!

Sunday, March 18, 2012
மூன்று படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றது ஏன்? என்பதற்கு சிம்பு பதில் கூறினார்.
போடா போடி, வேட்டை மன்னன், வட சென்னை ஆகிய 3 படங்களில் சிம்பு நடிக்கிறார். இப்படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் 1 மாத காலம் வெளிநாடு சென்ற¤ருந்தார். அவர் கூறியதாவது:
ஒஸ்தி படம் முடிந்து ரிலீஸ் ஆன பிறகு அமெரிக்கா சென்றுவிட்டேன். லவ் ஆன்த்தம் என்ற பெயரில் இசை ஆல்பம் உருவாக்குகிறேன். சர்வதேச அளவில் வெளியிடுவதற்காக இதை உருவாக்குவதால் இது பற்றி இசை கலைஞர்களுடன் ஆலோசிக்க அமெரிக்க சென்றேன். அங்கு புகழ்பெற்ற பாடகர்கள், இசை கலைஞர்களை சந்தித்து பேசினேன். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஆல்பத்தில் சில பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சில பாடல்களுக்கு நான் இசை அமைக்கிறேன். இருவரும் பாடுகிறோம். வெளிநாட்டு கலைஞர்களும் பாடுகின்றனர். காதல் என்ற கருவை வைத்து இந்த ஆல்பத்தை உருவாக்குகிறேன். இதேபோன்ற கருத்துடன் பலர் பாடல் உருவாக்குகிறார்கள்.

3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு சுமார் 1 மாதம் அமெரிக்கா சென்றது ஏன் என்கிறார்கள். என்னால் இதன் படப்பிடிப்பு தடைபடவில்லை. ஏற்கனவே கடந்த 1 மாதமாக ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. எந்த ஷூட்டிங்கும் நடக்கவில்லை. என் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் தினமும் தொடர்பில் இருந்தேன். எந்த இடத்தில் தங்கி இருக்கிறேன் என்பதை அவர்களிடம் அடிக்கடி தெரிவித்துக்கொண்டிருந்தேன். Ôபோடா போடிÕ படத்திற்காக 4 பாடல்கள் முடிக்க வேண்டி உள்ளது. இதற்காக ஏப்ரலில் வெளிநாடு செல்ல உள்ளோம்.வேட்டை மன்னன் ஏற்கனவே பாதிபடம் முடிந்திருக்கிறது. விரைவில் இப்படத்துக்காக பிரேசில் செல்கிறோம். இப்படங்கள் முடிந்ததும் வெற்றி மாறனின் வடசென்னை படத்தில் நடிப்பேன்.

Comments