ஆர்.பி.சவுத்ரியின் 'ரகளை'!!!

Monday, March 26, 2012
கோடம்பாக்கத்தின் குடியிருந்த கோவிலாக பலரும் நினைப்பது ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தைதான். இவர் ஏராளமான புது இயக்குநர்களுக்கு வாழ்வளித்தவர் என்ற பெருமை ஒரு புறம் இருந்தாலும், அவர்களையும் திறமையிருந்தால்தான் தேர்ந்தெடுப்பார் என்ற நல்ல பெயரும் இன்னொரு புறம் இருக்கிறது. ஆனால் கொஞ்ச நாட்களாக அன்னாரது பணப்பெட்டி எந்த புதுமுக இயக்குநருக்காகவும் திறக்கப்படவில்லை. கள்ளச் சாவி போட்டாவது இவரது பிடிவாதக் கதவை திறந்து விட வேண்டும் என்று முயற்சித்த பல இயக்குநர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வாழ்க்கை கொடுக்கிற வேலையே வேணாம்ப்பா என்று இவர் முடிவெடுக்கவும் சில காரணங்கள் இருந்தது. நீண்டகால ஒதுங்கலுக்கு பிறகு இவர் புது இயக்குநர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆபிஸ் ஒன்றையும் ஒதுக்கிக் கொடுத்தாராம். வந்த ரெண்டாம் நாளே, புரடக்ஷன் மேனேஜரிடம் வாட்டர் பாட்டில் கூலிங்கா இல்லை. ஆபிஸ்ல மெத்தை இல்ல. ஏ.சி இல்ல என்று ஏகப்பட்ட இல்ல... களை அள்ளிவிட்டாராம் அவர். தம்பி நேத்து வரைக்கும் குழாயில் தண்ணியடிச்சு குடிக்கிறீங்க. ஆபிஸ் போட்டுக் கொடுத்தா கூலிங்கா பிஸ்லரி கேட்கிறீங்க. உங்க அலட்டலுக்கு நான் சரிப்பட மாட்டேன். கிளம்புங்க என்று மீண்டும் புளியமரம் ஏறிவிட்டாராம். தெலுங்கு மார்க்கெட் நல்லாவும் இருக்கு. மரியாதையும் இருக்கு என்று அந்த பக்கம் கடைவிரித்திருக்கும் ஆர்.பி.சவுத்ரி தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படம் 'ரகளை'. ராம்சரணும்- தமன்னாவும் நடிக்கும் இந்த படம் 40 கோடியில் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழிலும் ரிலீஸ் ஆகும். பின்ன.. பழுத்த அனுபவசாலியாச்சே.. யாரு எப்டினு தெரியாதவரா என்ன?

Comments