Tuesday, March 06, 2012அஜித் தன்னைத் தேடிவரும் மாற்றுத் திறனாளிகள் யாராக இருந்தாலும் சாப்பிட வைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய செலவுக்குப் பணமும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடத்தும் 'சேரி டபிள் டிரஸ்ட்' போல ஒரு டிரஸ்ட் நடத்தும் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்கிறார்கள் நெருக்கமானவர்கள். அவர் அமைக்கப் போகும் டிரஸ்ட்டுக்கு ஷாலினிதான் மேற்பார்வையாளராக இருப்பார் என தெரிகிறது. பிறருக்கு உதவி செய்யும் குணத்தில் அஜித் எம்.ஜி.ஆர். கொள்கையை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு அடித்தளம் போடுறாரா தல...?!
Comments
Post a Comment