சவுந்தர்யாவை சிலாகிக்கும் ஆதி!!!

Wednesday,March,21,2012
நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா எதிர்காலத்தில் நல்ல இயக்குநராக வருவார் என்று நடிகர் ஆதி கூறியிருக்கிறார். எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க தன்னை தயார்படுத்தி, அதில் நடித்து பெயர் வாங்கும் திறமை படைத்தவர் நடிகர் ஆதி. அதற்கு நல்ல ஒரு உதாரணம் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த 'அரவான்' படம். அந்த படத்தில் அவரது நடிப்பும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் நல்ல பெயரை பெற்று தந்தது. அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தில் ஆதியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இதற்காக லண்டன் செல்லும் ஆதி, நம்மிடம் பேசுகையில், நான் ரொம்ப உற்சாகமாக இருக்கேன். இந்தபடத்தில் அப்படி ஒரு அருமையான ரோல் எனக்கு. இந்த படத்தில் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் நல்ல ஸ்கிரிப்ட், வசனம் எல்லாம் ரொம்ப அருமையாக எழுதி இருக்காங்க. முதன்முறையாக ஒரு பெண் இயக்குநரின் டைரக்ஷனில் நடிக்க போகிறேன். முதன்முதலாக என்னுடைய ரோல் பற்றி சவுந்தர்யா பேசும்போது, அவரை பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், ரொம்ப இயல்பாக, என்னுடைய ரோல் பற்றி சொல்லும் போது, சவுந்தர்யாவின் மெச்சூரிட்டி தெரிந்தது. யார்கிட்டேயும் அவங்க இதுவரைக்கும் ஒர்க் பண்ணியதில்லை. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கு. நிச்சயமாக சொல்றேன், சவுந்தர்யா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார் என்றார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா...?

Comments