தீவிர சிகிச்சை பிரிவில் நடிகை அல்போன்சா: விசாரணை நடத்துவதில் போலீசுக்கு சிக்கல்!!!

Wednesday, March 07, 2012
விருகம்பாக்கம்::நடிகை அல்போன்சா தொடர்ந்து இரண்டு நாளாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நிலையில், அவரது காதலன் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கின் விசாரணையை மேற்கொள்ள முடியாமல், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை அல்போன்சா, விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். அவரது காதலர் வினோத்குமாரும், அதே வீட்டிலேயே தங்கினார். கடந்த 4ம் தேதி நள்ளிரவு, வினோத்குமார் மர்மமான முறையில் இறந்தார்.

தற்கொலை என உறுதி: வினோத்குமார் தூக்குப் போட்டு இறந்ததாக, அல்போன்சா தரப்பில் கூறிய நிலையில், வினோத்குமாரை கொலை செய்து விட்டதாக, அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதனால், வினோத்குமார் இறப்பில் மர்மம் நீடித்தது. இந்நிலையில், வினோத்குமாரின் உடல் நேற்று முன்தினம், பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில், வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகை: தொடர்ந்து, இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவிலே, அல்போன்சா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க நெருங்கிய உறவினர்களைக் கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவரது உடல் நலம் பெற்று வருவதாக, சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறினர். மருத்துவமனையில் அல்போன்சாவை சந்திப்பதற்காக, தாயார் ஓமனா, மகள் ஆலியா மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர்.

தந்தையிடம் விசாரணை: அல்போன்சா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விருகம்பாக்கம் போலீசார் அல்போன்சாவின் தந்தை அந்தோணியிடம், நேற்று மாலை விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை தொடரும் எனவும், நடிகை அல்போன்சா உடல் நலம் சரியானவுடன், அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போதுதான் அங்கு நடந்தவை பற்றிய உண்மைகள் வெளிவரும் என போலீசார் கூறினர்.

Comments