டான்ஸ் மாஸ்டர் வீட்டில் பார்ட்டி : வாரம்தோறும் நடிகைகள் சந்திப்பு!!!

Wednesday,March,28,2012
வாரம்தோறும் பிரபல நடிகைகள் தனி பார்ட்டி நடத்தி, தங்கள் வாழ்க்கை ரகசியங்களை விவாதிக்கும் புது டிரெண்ட் கோலிவுட்டில் பரவி உள்ளது. ஹீரோயின்கள் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு விலகிய காலம் மாறி இப்போது வாரம்தோறும் தனி பங்களாவில் சந்தித்து பார்ட்டி கொடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதுபோல் ஒரு பார்ட்டி, சத்தம் இல்லாமல் சமீபகாலமாக சென்னையில் டான்ஸ் மாஸடர் பிருந்தாவின் பங்களாவில் நடக்கிறது. கடந்த வாரம் நடந்த பார்ட்டியில் குஷ்பு, த்ரிஷா, சுகாசினி, பிரியா ஆனந்த், ஐஸ்வர்யா தனுஷ், நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டி அணைத்து வரவேற்றுக்கொண்டவர்கள், பின்னர் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்குள் விளையாட்டு நடத்தி ஜாலியாக பொழுதை கழித்தனர். பின்னர் நடந்த விருந்தில் கலந்துகொண்டனர். இது குறித்து த்ரிஷா கூறும்போது, ‘எனக்கு சில நெருங்கிய தோழிகள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அவர்களை எனக்கு தெரியும். அவர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவர்கள். இந்த சந்திப்பின்போது விருந்து உண்டு ஜாலியாக இருப்போம். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பகிர்ந்துகொள்வோம். சீனியர் நடிகைகள் அதற்கேற்ப அட்வைஸ் தருவார்கள். ஆனால் சினிமா பற்றி இதில் பேச மாட்டோம்' என்றார்.

Comments