மெழுகுச் சிலையை ரசித்த பளிங்குச் சிலை!!!

Monday, March 12, 2012
லண்டன் மியூசியத்தில் பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி மாதுரி தீட்சித்தின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலையை பார்த்த மாதுரி, என்னை நானே பார்ப்பதாக கூறியிருக்கிறார். லண்டனில் உள்ள மேடாம் துஷாட்ஸ் மியூசியத்தில், உலகில் உள்ள பிரபலங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலிவுட்டின் அமிதாப் பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக்ரோஷன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் 6-வது பாலிவுட் ஸ்டாராக மாதுரியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவிற்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் லண்டன் சென்றிருந்தார் மாதுரி. சிலை திறப்புக்கு பின்னர் பேசிய மாதுரி தீட்சித், என்னை நானே பார்க்கிறேன். இந்த சிலை அச்சு அசலாக என்னைப்போன்று உள்ளது. உலகில் உள்ள பிரபலங்களின் சிலையோடு எனது சிலையும் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த சிலையை வடிவமைத்தவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார். உருகிடாதீங்க....!

Comments