சஸ்பென்ஸ் நாவல் படமாகிறது 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்!

Saturday, March 24, 2012
சஸ்பென்ஸ் நாவல் படமாகிறது. இதில் 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.‘அகராதி’ பட இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியதாவது:
கமர்ஷியல் படங்கள் மினிமம் கேரன்டி படங்களாக அமைவதுபோல் சஸ்பென்ஸ் கதைகளும் மினிமம் கேரன்டி படங்களாக அமைகிறது. அந்தபாணியில்தான் இப்படம் உருவாகிறது. த்ரில்லான கதைகளை எழுதுபவர் ராஜேஷ்குமார். அவரது நாவல் ஒன்றை தழுவிதான் இப்படம் உருவாகிறது. இதற்காக அவருடன் பலநாள் ஆலோசனை நடத்தி திரைக்கதை அமைத்தேன். நாவலில் எவ்வளவு சஸ்பென்ஸ் காக்கப்பட்டதோ அதே அளவுக்கு படத்திலும் சஸ்பென்ஸ் இருக்கும். பணத்தாசை ஒருவருக்கு பிடித்துவிட்டால் நல்ல உறவுகளையும் கெடுக்க துணிந்துவிடுகிறார்கள். பணத்துக்காக அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதுதான் கதைக்கரு.

பிரதீப், பவன், மோனிகா, ஓவியா, கீர்த்தி சாவ்லா, அர்ச்சனா, சத்யன் என நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சுந்தர்.சி.பாபு இசை. எம்.சிவகுமார் ஒளிப்பதிவு. இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது பெரும்பாலும் அமைதியாகவே ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும். சஸ்பென்ஸான சில காட்சிகளில் நிஜத்திலேயே ஓவியா மிரண்டிருக்கிறார். ஒரு காட்சியில் நடித்தபோது பதற்றத்தில் அவரது கைகளில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அதிகமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் குழப்பம் இல்லாமல் ஷூட்டிங் நடந்தது.

Comments