ஐஸ்வர்யாராய் குழந்தை பெயர் 'ஆரத்யா':4 மாதங்களாக பரிசீலித்து தேர்வு!!!

Thursday, March 15, 2012
ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் 16-ல் பெண் குழந்தை பிறந்தது. நான்கு மாதங்களாக குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும் பணியில் மொத்த குடும்பத்தினரும் ஈடுபட்டனர்.

ரசிகர்களிடமும் பெயர்கள் தேர்வு செய்து அனுப்புமாறு அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து டூவிட்டர், பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான பெயர்கள் குவிந்தது.

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா மூவருக்கும் ஏ ஆங்கில எழுத்தில் பெயர்கள் துவங்குவதால் குழந்தையின் பெயரும் ஏ-யில் ஆரம்பிப்பதாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

அதன்படி அபிலாஷா என்ற பெயரை இறுதியாக பரிசீலித்தனர். அந்த பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கடைசியாக ஆரத்யா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.

இப்பெயர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பிடித்து போனதாம். ஆரத்யா பெயரை பதிவு செய்துவிட்டனர். இந்த பெயர் சமஸ்கிருத மொழியாகும்.

Comments