வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் 'எதிரி எண் 3' !!!

Tuesday, March 13, 2012
உண்மைச் சம்பவங்கள் படமாவதும், சில சமயங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் போல் உண்மையில் நடப்பவையும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையர்களின் என்கவுண்டர் நிஜ சம்பவம் 'எதிரி எண் 3' படத்தின் கதை மற்றும் சம்பவங்களுடன் அப்படியே பொருந்தியிருக்கிறது.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதைப்படி, அதிபுத்திசாலியான ஸ்ரீகாந்தின் திறமையை ஒரு கொள்ளைக் கும்பல் தங்களது திருட்டுத் தொழிலுக்கும், வங்கிக் கொள்ளைக்கும் பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டுகிறது. முதலில் யோசிக்காமல் இதற்கு சம்மதிக்கும் ஸ்ரீகாந்த், யோசிக்க ஆரம்பித்த உடன் நிகழ்கிற சம்பவங்களை விறுவிறுப்பான திரைக்கதையாக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்காக வங்கி கொள்ளை மற்றும் என்கவுண்டர் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதற்கு பிறகு தான் நிஜ வங்கி கொள்ளையர்களின் என்கவுண்டர் சம்பவம் நடந்தது என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராம்குமார்.

இதில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜெயபிரகாஷ், சுமன், கஜினி ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். தரண் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கபிலன் எழுதியிருக்கிறார்.

Comments