பில்லா 2 ஷூட்டிங் இடையே பட குழுவினருக்கு பிரியாணி சமைத்து போட்டார் அஜீத்!!!

Tuesday, March 13, 2012
‘பில்லா 2 பட குழுவினர் 150 பேருக்கு தானே பிரியாணி சமைத்து விருந்து வைத்தார் அஜீத். இது பற்றி படக்குழுவினர் கூறியது: வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத் தில் நடித்தபோது தானே சமையல்காரராக மாறி பிரியாணி சமைத்த அஜீத், அதை இயக்குனர்கள் குழு மற்றும் உடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பரிமாறினார். மீண்டும் ஒருமுறை சமையல்காரராக அவர் மாறி இருக்கிறார். கோவாவில் ‘பில்லா 2Õ ஷூட்டிங் நடந்தது. படத் தில் 150 பேர் பணியாற்றினார்கள். திடீரென்று அவர்களுக்கு கமகம பிரியாணி பரிமாறப்பட்டது. பிறகுதான் அது அஜீத் சமைத்த பிரியாணி என்பது தெரிந்தது. இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ‘அஜீத் நல்ல நடிகர் என்பதுடன் சிறந்த செஃப் (சமையல்காரர்). படத்திற்காக போடப்பட்ட அரங்கிலேயே சிக்கன், மட்டன் என இருவகை பிரியாணி சமைத்தார். பிரியாணி செய்வதற்காக வேறு யாருடைய உதவியும் நாடாமல் தேவையான நேரம் எடுத்துக்கொண்டு சமையலில் ஈடுபட்டார். ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் அவர் பிரியாணி யின் பக்குவத்தை அடிக்கடி சென்று பார்த்தார். ருசியான அஜீத்தின் பிரியாணியை மீண்டும் சுவைக்க ஆவலாக இருக்கிறோம் என பட குழுவினர் கூறினர்.

Comments