சிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி!!!

Monday, March 26, 2012
கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்! ஆனால் நயன்தாரா தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழிகளில் தயாராக இருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் 'வடசென்னை'. ஆனால் இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு, வெற்றிமாறன் புதிதாக தொடங்கியிருக்கும் 'க்ராஸ் ரூட் புரடெக்ஷன்' என்ற தனது சொந்த பட நிறுவனத்தின் மூலம் சித்தார்த்- புதுமுகம் அர்ஜிதா ஜோடியை வைத்து 'தேசிய நெடுஞ்சாலை 45' என்ற படத்தை துரை.தயாநிதியுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது உதவியாளர் மணிகண்டனுக்கு கொடுத்திருக்கும் வெற்றிமாறன், இன்னொரு பக்கம் 'வடசென்னை' படத்துக்கு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதுதான் நம்பகமான வெற்றிமாறன் வட்டாரம் நமக்குத்தரும் தகவல். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்றார். தற்போது அந்த காதலும் முறிந்து விட்ட நிலையில் தன்னம்பிக்கையொடு தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தும் நயன்தாரா, சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சம்பளம் இரண்டு மடங்காக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம். அதாவது நயன் தமிழ், தெலுங்கு இரண்டுக்குமாக 1.50 கோடி கேட்கிறாராம். இந்த சம்பள விவகாரத்தை தற்போது டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பதாக தகவல் தருகிறார்கள். இந்த ஜோடி மீண்டும் சேர்ந்தால் படத்துக்கு வேறு விளம்பரமே தேவையில்லை என்பதால், இந்த சம்பளத்தை நயனுக்கு கொடுத்து விடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத்தேவையில்லை. சந்தடிச்சாக்கில் தனது 'லவ் ஆந்தத்தில் தலைகாட்ட முடியுமா என்று கேட்க.. அதற்கெல்லாம் நேரமில்லை' என்று கறாராக சொல்லி விட்டாராம் நயன்!

Comments