சிவாஜி, எம்.ஜி.ஆர் தலைப்புகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்!!!

Thursday, February 23, 2012
சிவாஜி கணேசன் நடிப்பில் 1964-ல் ரிலீசான படம், 'கர்ணன்'. மறைந்த பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். இந்தப்படத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்து, திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம் வெளியிடுகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிவாஜி மகன் ராம்குமார் வெளியிட, எல்.சுரேஷ் பெற்றார். நிகழ்ச்சியை ஒய்.ஜி.மகேந்திரனுடன் தொகுத்து வழங்கிய சேரன் பேசியதாவது: நடிகர் திலகத்தின் சாயல் இல்லாமல் இங்கே யாரும் நடிக்க முடியாது. 48 வருடங்களுக்கு முன் வந்த 'கர்ணன்', பிரமாண்டங்களின் உச்சம். அன்றைக்கு சினிமாவை மட்டுமே நேசித்தவர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் என்பதால்தான், இன்றும் காலத்தைக் கடந்து நிற்கிறது. இந்த வரிசையில் 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'உத்தம புத்திரன்', 'தில்லானா மோகனாம்பாள்' படங்களையும் புதுப்பித்து, வருங்கால சந்ததியினருக்கு சிவாஜியின் சாதனைகளை சொல்ல வேண்டும். சிவாஜி மகன் ராம்குமாரிடம் கோரிக்கை வைக்கிறேன். இனி சிவாஜி படங்களின் தலைப்புகளை, வேறு யாரும் வைக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோல், எம்.ஜி.ஆர் பட தலைப்புகளை மீண்டும் வைக்கவும் அனுமதிக்கக் கூடாது என்பதை, சினிமா துறையினருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு சேரன் பேசினார். விழாவில், கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, கலைப்புலி ஜி.சேகரன், வி.சி.குகநாதன், துஷ்யந்த் உட்பட பலர் பங்கேற்றனர். மதுவந்தி அருண் நன்றி கூறினார்.

Comments