'வாடா செல்லம்' பட நாயகி கரோலின் விபச்சார வழக்கில் கைது!

புனே:வாடா செல்லம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவரான நடிகை கரோலின் மரியத், புனேவில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலி்ல வைத்து அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர்.

22 வயதான கரோலின் மரியத், 2 தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளாராம். இதுதவிர சில நகைக் கடை, துணிக்கடை விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளாராம்.

இவருடன் ஒரு இரவை செலவிட ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டுமாம். இதுகுறித்து மூத்த இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், வலை விரித்து இந்தப் பெண்ணை நாங்கள் பிடித்துள்ளோம். சென்னையில் இவர் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

மரியத்துடன் அவரது மேலாளர் ராஜ்குமார் என்பவரும் சிக்கியுள்ளார். மரியத் மீது விமான் நகர் போலீஸில் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது என்றார்.

வாடா செல்லம் என்ற தமிழ்ப் படத்தில் கரோலின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.

Comments