நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி!!!

Saturday, February 25, 2012
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகர் வடிவேலு. அத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது முதல் நடிகர் வடிவேலும் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வீர்களா? என்று வடிவேலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,‘’வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்.

ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.என் தாய் சரோஜினி, உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார்.

அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லதேர்தலில் போட் டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள்.

காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்திக்கும் போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன்.

தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும்’’ என்று கூறியுள்ளார்.

Comments