டெக்னீஷியன்கள் தயாரிக்கும் படம்!!!

சென்னை:டெக்னீஷியன்கள் இணைந்து தமிழ் படம் தயாரிக்கின்றனர். திரைப்பட ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ்.குகன். இவர் ஏற்கனவே ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சனிக்கிழமை சாயங்காலம்‘ என்ற முழுபடத்தையும் ஸ்டில் கேமராவில் ஒளிப்பதிவு செய்து தயாரித்தார். இது லிம்கா மற்றும் எலைட் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது ‘முயல்’ என்ற படத்தை இயக்குகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,‘‘ஒரே கல்லூரியில் படிக்கும் 3 நண்பர்கள் படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று புறப்படும்போது அவர்களது வாழ்க்கையை ஒரு மிகப் பெரிய சம்பவம் புரட்டிப்போடுகிறது.

இதில் பாதிக்கப்படும் அவர்கள் வேறுயாருக்கும் இப்படியொரு சூழ்நிலை வரக்கூடாது அதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு செய்யும் செயல் தான் கதை. ‘புழல்’ படத்தில் நடித்த முரளி ஹீரோ. ‘பேராண்மை’ சரண்யா ஹீரோயின். இப்படமே ஒரு புதுமுயற்சி. இதை போட்டோ மற்றும் வீடியோகிரபர்கள் ஆகிய டெக்னீஷியன்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்காக தமிழ்நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான டெக்னீஷியன்களை சந்தித்து அவர்கள் எல்லோரிடமும் முதலீடு பெற்று இப்படம் தயாராகிறது’’ என்றார்.

Comments