Sunday, February 19, 2012தனது காதலன் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருந்த த்ரிஷா தற்போது படங்களைக் குறைத்துக் கொண்டிருக்கிறாராம். காரணம் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.
அவர் தற்போது பொள்ளாச்சியில் தம்மு என்ற தொலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது,
நான் மிகவும் பாசமானவள். நான் சிலருடன் தான் நட்பாகப் பழகுவேன். நட்பு என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது என்பதால் நான் யாருடன் பழகினாலும் அளவோடு தான் பழுகுவேன்.
என்னைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வருகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். தெலுங்கு நடிகர் ராணா எனக்கு நல்ல நண்பர். எனது திருமணத்திற்கு அதிக நாட்கள் இல்லை. என்னுடைய காதலன் யார் என்பதை விரைவில் இந்த உலகிற்கு அறிவிப்பேன். நான் தற்போது 3 பெரிய ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
எத்தனை நாட்கள் தான் மக்கள் பழைய ஜோடியையே பார்ப்பார்கள். அதனால் தான் புதுமுகங்களுக்கு வழிவிடுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
நாங்க நம்பிட்டோம்...!
Comments
Post a Comment