டபுள் ஹீரோக்கள் கதை அதிகரிக்க வேண்டும் : அர்ஜுன் பேட்டி!!!

Tuesday, February 21, 2012
நடிகர் அர்ஜுன் நடித்துள்ள கன்னட படம் ‘பிரதாப்’. இப்படம் பெர்லின் பட விழாவில் திரையிடப்படுகிறது. இதுபற்றி அர்ஜுன் கூறும்போது, ‘‘பெர்லின் பட விழாவில் ஷாருக்கான் நடித்த டான் 2 படம் திரையிடப்படுகிறது. அதே விழாவில் பிரதாப் படமும் திரையிடப்படுவது சந்தோஷம். பாலிவுட்டில் டபுள் ஹீரோக்கள் சப்ஜெக்ட் படங்கள் நிறைய வருகின்றன. தமிழில் அதுபோல் நிறைய வர வேண்டும். ஏற்கனவே கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அஜீத்துடன் ‘மங்காத்தா’ படத்தில் நடித்தேன். ஆக்ஷன் படங்களில் ஹீரோக்கள் ரிஸ்க் அதிகம் எடுக்க வேண்டும். அதுவும் காட்டுப்பகுதிகளில் கதை அமைந்துவிட்டால் கூடுதல் ரிஸ்க். சமீபத்தில் டினு வர்மா இயக்கத்தில் நான் நடித்த ‘காட்டுப்புலி’ முழுக்க காட்டு பகுதிகளில் எடுக்கப்பட்டது. டாக்டராக நான் நடித்தேன். ஆனால் காட்டுப்பகுதிக்குள் கதை நகர்ந்ததும் அதுவொரு ஆக்ஷன் கேரக்டராக மாறிவிடும். தமிழ், இந்தி, தெலுங்கு 3 மொழிகளில் உருவான இப்படத்தில் 3 ஜோடிகள் காட்டுவாசிகளிடம் சிக்கி எப்படி அவதிப்படுகின்றனர் என்பதை உள்ளடக்கிய கதை’’ என்றார்.

Comments