நம்பிக்கை வைத்தால் வாழ்வில் வெற்றிபெறலாம்: பள்ளி விழாவில் நடிகர் கருணாஸ் பேச்சு!

Tuesday, February 28, 2012
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா மெட்ரிக் பள்ளியின் 8-ம் ஆண்டு விழா நிறுவனர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றது.

தாளாளர் உதயக்குமார் வரவேற்றார். விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

சாகித்ய அகாடமி உறுப்பினர் தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார். திரைப்பட நடிகர் கருணாஸ் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சுசீலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் கருணாஸ் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள தாஞ்சூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவன் நான். நம் மண்ணில் நடக்கும் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். சாதனையளர்களாக இருந்தாலும் சாதிக்க துடிப்பவர்களாக இருந்தாலும் முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.

அதுபோன்ற நம்பிக்கையை என்மீது நான் வைத்ததால்தான் சினிமாத்துறையில் இன்று உங்கள் முன் கதநாயகனாக நிற்கிறேன். அதேபோல் மாணவர்களும் தங்களின் படிப்பின் மீது நம்பிக்கை வையுங்கள், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை மீது அவநம்பிக்கை வேண்டாம் நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள், வாழ்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் துணைத்தலைவர் சேட்டு, மாவட்ட பாசறை செயலாளர் ராஜசேகரன், அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சாம் பரமசிவம், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, இலுப்பூர் தாசில்தார் கருப்பையா, உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், பட்டதாரி ஆசிரியர் வேலுச்சாமி பள்ளி தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் பள்ளி முதல்வர் சாய் விஜயபாரதி நன்றி கூறினார்.

Comments