ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி - ஜாக்கி ஷராப்!

Thursday, February 16, 2012
ரஜினி கேட்டால் நான் மறுக்க மாட்டேன். அவருக்காக எதையும் செய்வேன். அந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று நடிகர் ஜாக்கி ஷராப் கூறினார்.

ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். பல வெற்றிப் படங்களின் நாயகன். இப்போதும் பிஸியான நடிகர்.

தமிழில் முதல்முறையாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார். அடுத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், "கோச்சடையானில் நடிக்குமாறு சௌந்தர்யா கேட்டுக் கொண்டார்.

சினிமாவில் ரஜினி ஒரு உன்னதமான அடையாளம். என்னுடைய நெருங்கிய நண்பர். நான் அவருடன் பணியாற்றியுள்ளேன், அவர் மீது மதிப்பு கொண்டுள்ளேன். அவர் கேட்டால் நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். ரஜினிக்காக எதையும் செய்வேன்.

கோச்சடையான் ஸ்கிரிப்ட் மிக அருமையாக இருந்தது. எனது கேரக்டரும் வலுவானது. எல்லோருமே ஏ கிரேடு தொழில்நுட்பக் கலைஞர்கள். சௌந்தர்யா பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறார். எனக்கு இந்தப் படம் பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என நம்பிக்கை உள்ளது.

அவரது எளிமை பிடிக்கும். அவரது உச்ச நட்சத்திர அந்தஸ்து ரொம்பப் பிடிக்கும். இந்தியாவின் நட்சத்திரமான அவர், ஹாலிவுட்டின் எந்தப் பெரிய நடிகரையும் விட உயர்வானவர். என்னைத் தவிர, என் மனைவி விரும்பும் ஒரே நடிகர் ரஜினிதான். அவர் மீது அந்த அளவு அன்பு!," என்றார் ஜாக்கி.

Comments